மேற்குவங்க மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி, 16 தொகுதிகளிலும் பேரணி, மக்கள் சந்திப்பு, மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கி றது.
இடது முன்னணி சார்பில் அறி விக்கப்பட்டுள்ள 16 வேட்பாளர் களில் 14 பேர் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்கள் என்ற நிலையில், மக்கள் கூடுமிடங்கள், சாலையோ ரங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேக ரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடது முன்னணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருமள வில் பெருகியுள்ளதற்கு சான்றாக அவர்களின் பங்கேற்பு இருக்கிறது.
ஹூக்ளி
ஹூக்ளி மக்களவைத் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனோதீப் கோஷ் போட்டி யிடுகிறார். இந்தத் தொகுதியில் உள்ள குராப் பகுதியில் விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாயத் தொழிலா ளர்களுக்கான வேலைவாய்ப்பு கள் குறைந்து விட்டன. இதனால் தொலைதூரத்திற்கு சென்று வேலை தேடுவதை இப்பகுதி மக் கள் வழக்கமாக வைத்துள்ளனர். தங்களுக்கு நிவாரணம் தேடித் தருவதாகச் சொல்லி வாக்குகளை வாங்கிச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சனைகளை இது வரை தீர்க்கவில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள், செங்கொடியின் கீழ் அணிவகுக்கத் தொடங்கி யுள்ளோம் என்கிறார்கள். மக்களி டம் பேசிய மனோதீப் கோஷ், 100 நாள் வேலைச்சட்டம் செயல் படுத்துவதை முறைப்படுத்த குரல் எழுப்புவேன் என்று உறுதிமொழி அளித்தார்.
மக்கள் வீடுகளை விட்டு வெளி யில் தாங்களாகவே வந்து திரண்டு நின்று வேட்பாளரின் பேச்சைக் கேட்டனர். 100 நாள் வேலைத்திட் டம் நிறுத்தப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டன என்று வேட்பாளரிடம் அவர் கள் குறை கூறினர். வீட்டுத் திட்டத் தின் கீழும் தாங்கள் பயனடைய வில்லை என்றும் மனோதீப் கோஷி டம் மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஹவுரா
ஹவுரா மக்களவைத் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளராக சப்யாசச்சி சட்டர்ஜி களமிறங்கியுள்ளார். மக்க ளவைத் தொகுதிக்கு உட்பட்ட துலியா, ஜோர்ஹாட் மற்றும் அன்டுல் ஆகிய பகுதிகளில் தீவிர மான பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசிடமிருந்து நாட்டைக் காப் போம் என்ற முழக்கத்துடன் மக்க ளைச் சந்தித்தனர். இதற்காக நாடா ளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பி னர்களின் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் என்று தலை வர்கள் மக்களிடம் வலியுறுத்தினர்.
‘உங்களோடு நிற்போம்’
தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட மக்களவைத் தொகுதி யான ஜல்பைகுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தேவ்ராஜ் பர்மன் போட்டியிடு கிறார். பலத்த மழை பெய்தபோதும் வேட்பாளரைச் சந்திக்க தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தன் னார்வத்துடன் வந்தனர்.
இந்தத் தொகுதியில் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு என் பதால் மழையைப் பொருட்படுத்தா மல் இடது முன்னணியின் தொண் டர்கள் மக்களைச் சந்தித்து வரு கிறார்கள். தோட்ட வேலை காலை 7.30 மணிக்குத் தொடங்குவதால் அதற்கு முன்பே மக்களைச் சந் தித்துப் பேசுவதற்காக வேட்பா ளர் தேவ்ராஜ் பர்மன், தோட்டங்க ளுக்குச் சென்று விடுகிறார்.
ஒரு தோட்டப்பகுதியில் ஒரு மித்த குரலில் சங்கர் கேரியா, பிர புல் லக்ரா, எத்தெல் ஓன்ராவ், சுமித்ரா மின்ஞ், சுனிதா எக்கா மற் றும் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடு களில் இருந்து தங்களை அப்பு றப்படுத்தும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இடது முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இவற்றின் சார்பில் வேட்பாளராக இருக்கும் நானும், உங்களோடு நிற்போம் என்று அவர் களிடம் தேவ்ராஜ் பர்மன் உறுதி யளித்தார். இடதுசாரிகளின் தொட ர்ந்த போராட்டமே பட்டாவை தற் போது பெற்றுக் கொடுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி னார்.